செய்திகள்
ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் சுழற்சி முறையில் கடைகள் திறப்பு
நகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கடைகளை சுழற்சி முறையில் திறக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 1,300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. முழு ஊரடங்கு உத்தரவால் காய்கறி, பலசரக்கு, மளிகை, இறைச்சி கடைகள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. இதர கடைகள் திறக்க அனுமதி இல்லை. இருப்பினும் அனுமதிக்கப்பட்ட கடைகள் வரிசையாக உள்ளதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இடமாற்றம் செய்யப்பட்ட காய்கறி கடைகள் மீண்டும் மார்க்கெட்டில் திறக்கப்பட்டதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, ஊட்டி மத்திய பஸ் நிலையம், ஏ.டி.சி. ஆகிய 2 இடங்களுக்கு காய்கறி கடைகள் இடமாற்றம் செய்ப்பட்டது. இருப்பினும் மார்க்கெட்டில் மளிகை, இறைச்சி கடைகளுக்கு பொதுமக்கள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். காலை 10 மணி வரை மட்டும் கடைகள் செயல்படுவதால், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் கொரோனா பரவும் இடமாக மாறி விடுமோ என்ற அச்சம் உள்ளது. இதை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கடைகளை சுழற்சி முறையில் திறக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
அதன்படி மார்க்கெட்டில் நேற்று முதல் கடைகள் சுழற்சி முறையில் திறக்கப்பட்டது. இதற்காக மளிகை, பலசரக்கு, இறைச்சி கடைகள் முன்பு ஏ, பி என நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது. இந்த கடைகள் ஒருநாள் விட்டு ஒருநாள் திறக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் வரிசையாக கடைகள் திறக்கப்படாததால் பொதுமக்கள் கூட்டம் குறைய வாய்ப்பு உள்ளது. இருப்பினும் சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மார்க்கெட்டில் உள்ள 3 ரேஷன் கடைகள் மதியம் ஒரு மணி வரை செயல்பட அனுமதி உள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் 1,300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. முழு ஊரடங்கு உத்தரவால் காய்கறி, பலசரக்கு, மளிகை, இறைச்சி கடைகள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. இதர கடைகள் திறக்க அனுமதி இல்லை. இருப்பினும் அனுமதிக்கப்பட்ட கடைகள் வரிசையாக உள்ளதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இடமாற்றம் செய்யப்பட்ட காய்கறி கடைகள் மீண்டும் மார்க்கெட்டில் திறக்கப்பட்டதால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, ஊட்டி மத்திய பஸ் நிலையம், ஏ.டி.சி. ஆகிய 2 இடங்களுக்கு காய்கறி கடைகள் இடமாற்றம் செய்ப்பட்டது. இருப்பினும் மார்க்கெட்டில் மளிகை, இறைச்சி கடைகளுக்கு பொதுமக்கள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். காலை 10 மணி வரை மட்டும் கடைகள் செயல்படுவதால், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அலட்சியமாக உள்ளனர். இதனால் கொரோனா பரவும் இடமாக மாறி விடுமோ என்ற அச்சம் உள்ளது. இதை தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி கடைகளை சுழற்சி முறையில் திறக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
அதன்படி மார்க்கெட்டில் நேற்று முதல் கடைகள் சுழற்சி முறையில் திறக்கப்பட்டது. இதற்காக மளிகை, பலசரக்கு, இறைச்சி கடைகள் முன்பு ஏ, பி என நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது. இந்த கடைகள் ஒருநாள் விட்டு ஒருநாள் திறக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் வரிசையாக கடைகள் திறக்கப்படாததால் பொதுமக்கள் கூட்டம் குறைய வாய்ப்பு உள்ளது. இருப்பினும் சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மார்க்கெட்டில் உள்ள 3 ரேஷன் கடைகள் மதியம் ஒரு மணி வரை செயல்பட அனுமதி உள்ளது.