செய்திகள்
கைது

நாகையில் சாராயம் விற்ற 5 பேர் கைது

Published On 2021-05-17 11:20 GMT   |   Update On 2021-05-17 11:20 GMT
கீழ்வேளூர் காவல் சரகம் சிக்கல் குற்றம்புறிந்தானிருப்பு பகுதியிலுள்ள ஐயர் தனபால் என்பவரது வயலில் உள்ள வைக்கோல் போரில் சாராயம் 1400 லிட்டர் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
நாகப்பட்டினம்:

நாகை மாவட்டத்தில் மது குற்றங்களை தடுக்கும் பொருட்டு எஸ்.பி. ஓம் பிரகாஷ் மீனா. உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் கீழ்வேளூர் காவல் சரகம் சிக்கல் குற்றம்புறிந்தானிருப்பு பகுதியிலுள்ள ஐயர் தனபால் என்பவரது வயலில் உள்ள வைக்கோல் போரில் சாராயம் 1400 லிட்டர் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக சஞ்சய் செங்குட்டுவன், மற்றும் அவரது நண்பர்களான குமரேசன், ஐயர் தனபாலன், ரகு ஆகிய 5 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News