செய்திகள்
திட்டக்குடி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
திட்டக்குடி அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.’
திட்டக்குடி:
திட்டக்குடி அருகே உள்ள கோழியூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கொளஞ்சி. இவரது மனைவி பச்சையம்மாள்(வயது 60). வீட்டில் இருந்த இவர், திடீரென விஷம் குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பச்சையம்மாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.