செய்திகள்
கோப்புபடம்

கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது

Published On 2021-04-05 10:41 GMT   |   Update On 2021-04-05 10:41 GMT
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:

கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கீழ்வேளூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ்வேளூர் அருகே சிகார் ஆற்றங்கரை பகுதியில் சாராயம் விற்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினார்.

விசாரணையில் அவர், புதுப்பத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த சக்கரபாணி (வயது65) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்கரபாணியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல காவாலக்குடி அம்மன் கோவில் அருகே சாராயம் விற்ற ஆந்தக்குடி அறுபதாம் கட்டளை பகுதியை சேர்ந்த பழனிவேல் (58) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News