செய்திகள்
கோப்பு படம்.

வேதாரண்யம் அருகே வெட்டி கொண்டிருந்த பனைமரம் விழுந்ததில் தொழிலாளி பலி

Published On 2021-04-01 10:04 GMT   |   Update On 2021-04-01 10:04 GMT
வயலில் உள்ள பனை மரத்தை வெட்டி கொண்டிருந்த தொழிலாளி மீது விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் பெத்துகுட்டி தெருவை சேர்ந்தவர் அன்பழகன் (வயது55). இவர் மரம் வெட்டி உடைக்கும் தொழில் செய்து வந்தார்.

சம்பவத்தன்று அதே ஊரை சேர்ந்த ஒருவரது வயலில் உள்ள பனை மரத்தை வெட்டி கொண்டிருந்தார். அப்போது திடீரென அதே பனைமரம் அன்பழகன் மீது விழுந்தது.

இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி அன்பழகன் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News