செய்திகள்
கோப்புபடம்

போர்வையால் கழுத்தை இறுக்கி வாலிபர் கொலை - கள்ளக்காதலிகள் 2 பேர் கைது

Published On 2021-03-29 02:19 GMT   |   Update On 2021-03-29 02:20 GMT
போர்வையால் கழுத்தை இறுக்கி வாலிபரை கொன்று தூக்கில் தொங்க விட்ட கள்ளக்காதலிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
நாகை:

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள செருநல்லூர் மேலத்தெரு பகுதியில் உள்ள ஒரு மரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடப்பதாக நேற்று முன்தினம் இரவு போலீசாருக்கு தகவல் வந்தது.

போலீசாரின் விசாரணையில், தூக்கில் பிணமாக தொங்கியவர் கீழ்வேளூர் அருகே உள்ள காக்கழனி காலனி தெருவை சேர்ந்த அய்யப்பன் (வயது 22) என்பது தெரியவந்தது.

அய்யப்பன் தூக்கில் தொங்கியதற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது பரபரப்பு தகவல்கள் கிடைத்தது.

இதுகுறித்து போலீசார் தெரிவித்ததாவது:-

செருநல்லூரை சேர்ந்த அண்ணன் தம்பிகளான ஆனந்தன் மனைவி ரஜிபாணி(34) மற்றும் அன்பரசன் மனைவி கவுதமி (26) ஆகிய இருவரும் உறவினர்கள். ரஜிபாணி, கவுதமி ஆகிய இருவரிடமும் அய்யப்பன் நீண்ட நாட்களாக கள்ளத்தொடர்பு வைத்து வந்துள்ளதாக தெரிகிறது.

இதை அய்யப்பன் குடும்பத்தினர் கண்டித்து உள்ளனர். ஆனாலும் இந்த கள்ளத்தொடர்பு தொடர்ந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இரவு மதுகுடித்து விட்டு ரஜிபாணி வீட்டிற்கு வந்த அய்யப்பன் தகராறில் ஈடு்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த தகராறு உச்சக்கட்டம் அடைந்த நிலையில் ரஜிபாணி, கவுதமி ஆகிய இருவரும் சேர்ந்து போர்வையால் அய்யப்பனின் கழுத்தை இறுக்கியுள்ளனர்.

இதில் மயங்கிய நிலையில் இருந்த அய்யப்பனை வீட்டின் பின்புறம் உள்ள கருவேலமரத்தில் ரஜிபாணி, கவுதமி ஆகிய இருவரும் சேர்ந்து தூக்கு மாட்டி தொங்க விட்டுள்ளனர்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஜிபாணி, கவுதமி இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News