செய்திகள்
தற்கொலை

கீழ்வேளூர் அருகே வி‌ஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை

Published On 2021-03-28 17:45 IST   |   Update On 2021-03-28 17:45:00 IST
கீழ்வேளூர் அருகே வி‌ஷம் குடித்து பெயிண்டர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகப்பட்டினம்:

கீழ்வேளூர் அருகே ஆந்தகுடி வடக்கு தெருவை சேர்ந்தவர்கள் முருகையன் ராணி தம்பதியினர்.இவர்களுடைய மகன் அருண் பாண்டி (வயது 22), பெயிண்டர்.

அலிவலம் பகுதியை சேர்ந்த செல்வம் மகள் கார் குலஸ்தேவி (21) காதல் திருமணம் செய்து கொண்டார்.

அடிக்கடி இருவருக்கு தகராறு ஏற்பட்டதால் கார் குலஸ்தேவி அவருடைய தகப்பனார் வீட்டுக்கு ஒரு மாதத்திற்கு முன் சென்றுவிட்டார்.

அதனால் மனமுடைந்த அருண்பாண்டி வீட்டில் வி‌ஷம் குடித்தார்.அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கீவளூர் போலீசில் ராணி வயது (50) புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News