செய்திகள்
நகை பறிப்பு

பெண்ணிடம் 4½ பவுன் சங்கிலி பறிப்பு

Published On 2021-03-26 15:20 GMT   |   Update On 2021-03-26 15:20 GMT
இலுப்பூர் அருகே பெண்ணிடம் 4½ பவுன் சங்கிலி பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல்:

இலுப்பூர் கண்ணாரத்தெருவை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி மாணிக்கத்தம்மாள் (வயது 78). ஓய்வு பெற்ற சத்துணவு உதவியாளரான இவர் தனது குடும்பத்தினருடன் இலுப்பூரில் உள்ள தரம் தூக்கி பிடாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அனைவரும் கோவிலுக்கு உள்ளே சென்றதும் மாணிக்கத்தம்மாள் மட்டும் பின்புற கதவு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 2 மர்ம நபர்கள் மாணிக்கத்தம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 4½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News