செய்திகள்
மரணம்

இலுப்பூர் அருகே பாம்பு கடித்து வாலிபர் மரணம்

Published On 2021-03-26 19:17 IST   |   Update On 2021-03-26 19:17:00 IST
இலுப்பூர் அருகே பாம்பு கடித்து வாலிபர் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அன்னவாசல்:

இலுப்பூர் அருகே உள்ள சொரியம்பட்டியை சேர்ந்தவர் கருப்பையா. விவசாயி. இவரது மகன் பெரியசாமி (வயது 25). வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற பெரியசாமியை பாம்பு கடித்தது. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News