செய்திகள்
பாம்பு கடித்து விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரமங்கலம்:
கீரமங்கலம் தெற்கு கொடிக்கரம்பை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 58). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்ற போது, வாய்க்காலில் கிடந்த கட்டுவிரியன் பாம்பு மீது கால் வைத்ததால் ராஜேந்திரன் காலில் கடித்தது. பாம்பு கடித்து விட்டதை பார்த்த ராஜேந்திரன் உடனடியாக வீட்டிற்கு வந்து தனக்கு பாம்பு கடித்துவிட்டதாக கூறியுள்ளார். உடனே அவரது உறவினர்கள் ராஜேந்திரனை கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து, அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
கீரமங்கலம் தெற்கு கொடிக்கரம்பை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 58). விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச சென்ற போது, வாய்க்காலில் கிடந்த கட்டுவிரியன் பாம்பு மீது கால் வைத்ததால் ராஜேந்திரன் காலில் கடித்தது. பாம்பு கடித்து விட்டதை பார்த்த ராஜேந்திரன் உடனடியாக வீட்டிற்கு வந்து தனக்கு பாம்பு கடித்துவிட்டதாக கூறியுள்ளார். உடனே அவரது உறவினர்கள் ராஜேந்திரனை கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து, அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீரமங்கலம் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.