செய்திகள்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

டிராக்டரில் விழா மேடைக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Published On 2021-02-21 11:47 IST   |   Update On 2021-02-21 14:58:00 IST
காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறிது தூரம் டிராக்டர் ஓட்டியவாறு விழா மேடைக்கு வந்தார்.
விராலிமலை:

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட எல்லையான நாகமங்கலம் மற்றும் குன்னத்தூர் விலக்கு ஆகிய இடங்களில் திரளானோர் வரவேற்பு கொடுத்தனர். வழியெங்கும் வாழை மரம் மற்றும் கரும்புகளை கொண்டு தோரணங்கள், நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டிருந்தன.

மேலும் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் 100-க்கும் மேற்பட்ட டிராக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க தயார் நிலையில் இருந்தனர். அவர்கள் எடப்பாடி பழனிசாமி வந்ததும் டிராக்டரில் ஏற்றினர்.

பின்னர் எடப்பாடி பழனிசாமி சிறிது தூரம் டிராக்டர் ஓட்டியவாறு விழா மேடைக்கு வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் உற்சாக கோ‌ஷம் எழுப்பினர்.

Similar News