செய்திகள்
ஒரகடம் அருகே பாம்பு கடித்து மூதாட்டி பலி
ஒரகடம் அருகே வீட்டில் படுத்துக் கொண்டிருந்த மூதாட்டி மீது பாம்பு கடித்தது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
படப்பை:
காஞசீபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள ஏலக்காய் மங்கலம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சிதம், (வயது 80). மூதாட்டியான இவர், நேற்று முன்தினம் வீட்டில் படுத்துக் கொண்டிருந்தபோது காலில் பாம்பு கடித்து உள்ளது.
இதனை கண்ட மூதாட்டி அலறியடித்து எழுந்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஓரகடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.