செய்திகள்
விபத்து பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலி

Published On 2021-01-09 18:09 IST   |   Update On 2021-01-09 21:36:00 IST
மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

இலுப்பூரை சேர்ந்தவர் மூக்காயி (வயது50). சம்பவத்தன்று, இவர் தனது மகன் கிருஷ்ணகுமாருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது திருக்கோகர்ணம் அருகே சென்றபோது, மூக்காயி திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தார். இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Similar News