செய்திகள்
கொள்ளை

காட்டுமன்னார்கோவில் அருகே பெண்ணை தாக்கி நகை பறித்த முகமூடி கொள்ளையர்

Published On 2020-12-18 13:05 IST   |   Update On 2020-12-18 13:05:00 IST
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே பெண்ணை தாக்கி 5 பவுன் நகையை பறித்து சென்ற முகமூடி கொள்ளையர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள தெற்கிருப்பு கிராமம் திருவள்ளூவர் நகரை சேர்ந்தவர் சரவணன். மின்வாரியத்தில் பணியாற்றி வருகிறார்.

அவரது மனைவி தீபா. இவர் அதிகாலை வீட்டின் பின்புறம் உள்ள கழிவறைக்கு சென்றார். அப்போது அங்கு பதுங்கி இருந்த முகமூடி கொள்ளையர் சரமாரியாக தாக்கினர்.

இதில் தீபா அலறி துடித்தவாறு கீழே விழுந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய முகமூடி கொள்ளையர் தீபா கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு வயல் வெளியாக தப்பி ஓடிவிட்டனர்.

அலறல் சத்தம் கேட்டு தீபாவின் கணவர் சரவணன் மற்றும் உறவினர்கள் ஓடிவந்தனர். நடந்த விவரத்தை தீபா அவர்களிடம் தெரிவித்தார். உடனடியாக அங்குள்ளவர்கள் கொள்ளை கும்பலை தேடி சென்றனர். ஆனால், அவர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

இது குறித்து காட்டு மன்னார்கோவில் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.

Similar News