செய்திகள்
தனியார் நிறுவன ஊழியர் மர்மமரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆதனக்கோட்டை:
பெருங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 38). இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் செல்லத்துரை பெருங்களூர் அருகே உள்ள விவசாய தோட்டத்தில் பிணமாக கிடந்தார். மேலும் அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. இது குறித்த புகாரின் பேரில் ஆதனக்கோட்டை போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.