செய்திகள்
மரணம்

வேலூர் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி

Published On 2020-12-09 16:26 IST   |   Update On 2020-12-09 16:26:00 IST
வேலூர் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:

வேலூர் அருகே உள்ள கத்தாழம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் விநாயகம் (வயது 65). விவசாயி. இவர் சம்பவத்தன்று வீட்டின் அருகே மாடிப்படியில் நின்று கொண்டு அருகில் உள்ள மரக்கிளையை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து விநாயகத்தின் மகன் பிரபு வேலூர் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News