செய்திகள்
புதுக்கோட்டை அருகே வாகன விபத்தில் முதியவர் பலி
புதுக்கோட்டை அருகே வாகன விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை பாலன் நகரை சேர்ந்தவர் காசிராமன் (வயது 63). இவர் அழகுநிலையம் நடத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று காலை மொபட்டில் அரசு மகளிர் கலைக்கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம், மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கிவீசப்பட்ட காசிராமன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் விரைந்து வந்து காசிராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.