செய்திகள்
அறந்தாங்கி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
அறந்தாங்கி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கி அருகே கூத்தனுரில் காத்தாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள உண்டியலை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்து நாகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.