செய்திகள்
திருமயம் அருகே பஸ் மோதி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமயம்:
திருமயம் அருகே உள்ள நச்சாந்துபட்டிபுதூரை சேர்ந்தவர் முகமது காசிம். இவரது மனைவி ஆசிப் பேகம்(வயது 26). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டைக்கு சென்றுவிட்டு மீண்டும் நச்சாந்துபட்டி நோக்கி வந்து கொண்டிருந்தனர். சிவபுரம் அருகே அவர்கள் வந்தபோது புதுக்கோட்டையில் இருந்து கீழசேவல்பட்டி சென்ற தனியார் பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த ஆசிப்பேகம் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.