செய்திகள்
கோப்பு படம்.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Published On 2020-10-26 12:14 GMT   |   Update On 2020-10-26 12:14 GMT
கண்ணமங்கலம் அருகே பணத் தகராறில் பெண்ணை கொலை செய்த தொழிலாளி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கண்ணமங்கலம்:

கண்ணமங்கலம் அருகே உள்ள ஒண்ணுபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 65). இவரிடம் அதேப்பகுதியை சேர்ந்த நெசவுத்தொழிலாளி கணேசன் (35) என்பவர் பணம் வாங்கியிருந்தார். பணத்தை திருப்பி கொடுக்கும்படி, ராஜேஸ்வரி கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணேசன், கடந்த ஆகஸ்டு மாதம் 20-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த ராஜேஸ்வரியை அடித்துக்கொலை செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்து, நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டார். 

இதுகுறித்து கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கணேசனை கைது செய்து நகைகளை மீட்டனர். கணேசன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் கணேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் கணேசனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கந்தசாமி உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகல் ஜெயிலில் உள்ள கணேசனிடம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News