செய்திகள்
விபத்து பலி

அரியலூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

Published On 2020-09-16 07:36 GMT   |   Update On 2020-09-16 07:36 GMT
அரியலூர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தா.பழூர்:

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிலால் நடுத்தெருவை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மகன் புருஷோத்தமன்(வயது 22). பொறியியல் பட்டய படிப்பு படித்துள்ள இவர், நேற்று மதியம் வானதிரையன்பட்டினம் சாலையில் உள்ள தனது வயலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு, வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். தனது வீட்டின் அருகே வந்தபோது சாலையில் இருந்த மண்ணில் சறுக்கி மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்ததில், அவர் கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த புருஷோத்தமனை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தா.பழூர் போலீசில் குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பேபி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Tags:    

Similar News