செய்திகள்
கோப்புபடம்

கந்திகுப்பம் அருகே சிறுமி பாலியல் பலாத்காரம் - பெயிண்டர் கைது

Published On 2020-09-10 08:05 GMT   |   Update On 2020-09-10 08:05 GMT
கந்திகுப்பம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக பெயிண்டரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பர்கூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் செங்கொடிபுரத்தை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 26), பெயிண்டர். இவர், கந்திகுப்பம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் கந்திகுப்பம் போலீசில் புகார் செய்தார். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அஜித்குமாரை கைது செய்தனர். அவர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News