செய்திகள்
பள்ளிகொண்டா பேரூராட்சியில் சாலை பணியை கலெக்டர் ஆய்வு
பள்ளிகொண்டா பேரூராட்சியில் சாலை பணியை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் வேலுார் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அம்சா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா பேரூராட்சிக்குட்பட்ட ராமாபுரம் சாலை வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சேதமடைந்தது. இந்த சாலையை செப்பனிட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி ரூ.75 லட்சத்தில் தார்சாலை போடப்பட்டது. இந்த நிலையில் தார்சாலை தரமற்றதாக போடபட்டதாக கலெக்டருக்கு புகார் மனு அனுப்பி இருந்தனர். அதன்பேரில் நேற்று மாலை ராமாபுரம் தார் சாலையை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் மற்றும் வேலுார் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் அம்சா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது சாலையின அகலம் மற்றும் நீளம் குறித்தும், தரத்துடன் சாலைபோடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார். சாலை தரமாக உள்ளதாகவும், சாலையின் இரு புறமும் போதிய இடவசதி இல்லாததால் மண் அணைக்க முடியாத காரணத்தினால் சாலை ஓரங்களில் சில இடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது, அதை சீரமைக்க கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின் போது பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் மலர்மாறன், இளநிலை பொறியாளர் சண்முகம் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.