செய்திகள்
கைது

வேளாங்கண்ணி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது

Published On 2020-08-23 16:46 IST   |   Update On 2020-08-23 16:46:00 IST
வேளாங்கண்ணி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரத்தை சேர்ந்த பாலுசாமி மகன் பாபுராஜ் (வயது28). சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாபுராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News