செய்திகள்
வேளாங்கண்ணி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை- வாலிபர் கைது
வேளாங்கண்ணி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரத்தை சேர்ந்த பாலுசாமி மகன் பாபுராஜ் (வயது28). சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் கீழையூர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாபுராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.