செய்திகள்
பயனாளி ஒருவருக்கு கோழிக்குஞ்சுகளை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.

குத்தாலம் கால்நடை மருத்துவமனையில் 225 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள்- ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார்

Published On 2020-08-21 14:52 IST   |   Update On 2020-08-21 14:52:00 IST
மயிலாடுதுறை அருகே குத்தாலம் கால்நடை மருத்துவமனையில் 225 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகளை ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
பாலையூர்:

மயிலாடுதுறை அருகே குத்தாலம் கால்நடை மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை கோட்டம் சார்பில் புறக்கடை கோழி வளர்ப்பு திட்டம் 2019-2020-ன் கீழ் பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குத்தாலம் பேரூர் செயலாளரும், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவருமான பாலு தலைமை தாங்கினார். குத்தாலம் கால்நடை மருத்துவர் சுரேஷ், நக்கம்பாடி கால்நடை மருத்துவர் சந்தோஷ், தேரழுந்தூர் கால்நடை மருத்துவர் சபிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில் ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 225 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சுகளை வழங்கினார். இதில் அ.தி.மு.க. மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் வி.ஜி.கே செந்தில்நாதன், எம்.சி.பி. ராஜா, பேரூர் இளைஞரணி துணை செயலாளர் ஜெயபாலகிருஷ்ணன், மயிலாடுதுறை நகர கழக துணை செயலாளர் நாஞ்சில் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர். 

பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து பாதுகாப்பான முறையில் கோழிக் குஞ்சுகளை பெற்று சென்றனர்.

Similar News