செய்திகள்
கைது

மணல்மேடு அருகே சாராயம் விற்ற 5 பேர் கைது

Published On 2020-08-18 10:02 GMT   |   Update On 2020-08-18 10:02 GMT
மணல்மேடு அருகே சாராயம் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மணல்மேடு:

மணல்மேடு பகுதிகளில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக மணல்மேடு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் இன்பெக்டர் வேலுதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிலரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சின்ன இலுப்பப்பட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கணேசன் (வயது 47), ஐவநல்லூர் மன்மதன் கோவில் தெருவை சேர்ந்த விஜயகுமார் (24), அதிமான புருஷன் காலனி தெருவை சேர்ந்த ராஜதுரை ( 34), திருச்சிற்றம்பலம் மெயின்ரோட்டை சேர்ந்த சிவபெருமாள் (40), வேப்பங்குளம் பகுதியை சேர்ந்த பாலாஜி (39) ஆகியோர் என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது. 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்த சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News