செய்திகள்
சுதந்திர தினத்தை முன்னிட்டு வேதாரண்யம் கடலோர கிராமங்களில் போலீசார் தீவிர ரோந்து பணி
சுதந்திர தினத்தை முன்னிட்டு வேதாரண்யம் கடலோர கிராமங்களில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகா கடற்கரையோர கிராமங்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தீவிர கண்காணிப்பு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இலங்கைக்கு அருகில் கோடியக்கரை இருப்பதால் தீவிரவாதிகள் கோடியக்கரை கடலோரபகுதி வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக கருதி வேதாரண்யம் கடலோர காவல் குழுமம் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம் மற்றும் கடலோர போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டனர். வேதாரண்யம், ஆறுகாட்டுதுறை, மணியன்தீவு, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வேட்டைக்காரனிருப்பு, நாலுவேதபதி, பெரியகுத்தகை, கோடியக்கரை உள்ளிட்ட கடலோர கிராமங்களில் கடலோர காவல் குழுமம் போலீசார், வேதாரண்யம் சட்டம்-ஒழுங்கு போலீசார், கியூ பிராஞ்ச் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேதாரண்யம் கடற்கரை வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஆட்கள் வந்தாலும் அல்லது வெளிநாட்டு படகு நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவர்களிடம் போலீசார்் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் கோடியக்கரை, வேதாரண்யம், புஷ்பவனம், செம்போடை, மேலும் வேதாரண்யம் தாலுக்காவிலுள்ள 11 சோதணை சாவடிகளிலும் வாகன தணிக்கையும் தீவிரமாக நடைபெறுகிறது.
சட்டம்-ஒழுங்கு போலீசார், கடலோர காவல்படை போலீசார், கியூ பிராஞ்ச் போலீசார் என அனைத்து உளவுத்துறை போலீசார்களும், கடற்கரை பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேதாரண்யம் தாலுகா கடற்கரையோர கிராமங்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தீவிர கண்காணிப்பு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இலங்கைக்கு அருகில் கோடியக்கரை இருப்பதால் தீவிரவாதிகள் கோடியக்கரை கடலோரபகுதி வழியாக தமிழகத்துக்குள் ஊடுருவ வாய்ப்புள்ளதாக கருதி வேதாரண்யம் கடலோர காவல் குழுமம் துணை போலீஸ் சூப்பிரண்டு குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம் மற்றும் கடலோர போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டனர். வேதாரண்யம், ஆறுகாட்டுதுறை, மணியன்தீவு, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வேட்டைக்காரனிருப்பு, நாலுவேதபதி, பெரியகுத்தகை, கோடியக்கரை உள்ளிட்ட கடலோர கிராமங்களில் கடலோர காவல் குழுமம் போலீசார், வேதாரண்யம் சட்டம்-ஒழுங்கு போலீசார், கியூ பிராஞ்ச் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வேதாரண்யம் கடற்கரை வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஆட்கள் வந்தாலும் அல்லது வெளிநாட்டு படகு நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மீனவர்களிடம் போலீசார்் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும் கோடியக்கரை, வேதாரண்யம், புஷ்பவனம், செம்போடை, மேலும் வேதாரண்யம் தாலுக்காவிலுள்ள 11 சோதணை சாவடிகளிலும் வாகன தணிக்கையும் தீவிரமாக நடைபெறுகிறது.
சட்டம்-ஒழுங்கு போலீசார், கடலோர காவல்படை போலீசார், கியூ பிராஞ்ச் போலீசார் என அனைத்து உளவுத்துறை போலீசார்களும், கடற்கரை பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.