செய்திகள்
கோப்புபடம்

வேலை வாங்கி தருவதாக முதியவரிடம் ரூ.1¼ லட்சம் மோசடி - விவசாயி கைது

Published On 2020-08-13 15:39 GMT   |   Update On 2020-08-13 15:39 GMT
பண்ருட்டி அருகே முதியவரிடம் வேலை வாங்கி தருவதாக ரூ.1¼ லட்சத்தை மோசடி செய்த விவசாயி கைது செய்யப்பட்டார்.
பண்ருட்டி:

பண்ருட்டி அருகே உள்ள சித்தரசூர் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி(வயது 60), இவருக்கும் பண்ருட்டி மேலப்பாளையத்தை சேர்ந்த விவசாயி விஜயன்(61) என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்தது. அப்போது விஜயன் நாராயணசாமியின் மகளுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 8.12.2017 அன்று ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் விஜயன் சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை. இதையடுத்து நாராயணசாமி தான் கொடுத்த பணத்தை திருப்பித் தருமாறு விஜயனிடம் பல தடவை கேட்டு வந்தார். ஆனால் பணம் திருப்பித் தராமல் விஜயன் ஏமாற்றி வந்ததோடு, தனது குடும்பத்தினருடன் சேர்ந்து நாராயணசாமிக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் விஜயனின் மனைவி சரஸ்வதி (55), மகள் அன்பரசி (30), மகன் மணியரசு (27) உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிந்து, விஜயனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News