செய்திகள்
விருத்தாசலத்தில் பெண்ணை தாக்கிய 4 பேர் கைது
விருத்தாசலம் அருகே முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் பெண்ணை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அடுத்த குப்பநத்தம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக வெற்றிபெற்ற அய்யாக்கண்ணு மனைவி தனலட்சுமி தரப்பினருக்கும், அவரை எதிர்த்து போட்டியிட்ட வரதராஜன் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் அய்யாக்கண்ணுவின் ஆதரவாளரான ரவி மனைவி சுமதி(வயது 40) என்பவரின் வீட்டிற்கு சென்ற வரதராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்களான 15 பேர், சுமதியை ஆபாசமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததுடன் அவரது வீடு மற்றும் மோட்டார் சைக்கிளை சேதப்படுத்தியதாக தெரிகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் வரதராஜன் உள்பட 16 பேர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாக்யராஜ் மனைவி சபிதா(31), பூபாலன் மனைவி நவ ஜெயா(26), சிவப்பிரகாசம் மனைவி சுந்தரி(36), தாமோதரன் மனைவி சசிரேகா(38) ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.