செய்திகள்
கடலூரில் விவசாயி வீட்டில் 15 பவுன் நகை திருட்டு
கடலூரில் விவசாயி வீட்டின் பின்பக்க தகவை உடைத்து 15 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கடலூர்:
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் எஸ்.எஸ்.ஆர். நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் அருள்ராஜா, விவசாயி. இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 29). இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்தினருடன் தம்பிப்பேட்டையில் உள்ள விளை நிலத்திற்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டுக்குள் சென்று பார்த்தார்.
அப்போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 15 பவுன் நகைகளை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.4½ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து விஜயலட்சுமி, திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.