செய்திகள்
காஞ்சிபுரத்தில் ஊரடங்கை மீறிய 2 ஓட்டல்களுக்கு சீல்
காஞ்சிபுரம் நெல்லுக்கார சாலையில் முழு ஊரடங்கை மீறி 2 ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
காஞ்சிபுரம்:
கொரோனா தொற்றை தடுக்க தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் மருந்துகடைகள், பால் கடைகள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. வாகன போக்குவரத்து இன்றி அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன.
இந்த நிலையில், காஞ்சிபுரம் நெல்லுக்கார சாலையில் முழு ஊரடங்கை மீறி 2 ஓட்டல்கள் செயல்படுவதாக காஞ்சிபுரம் நகராட்சி கமிஷனர் மகேஸ்வரிக்கு தகவல் வந்தது. இதையடுத்து நகராட்சி அதிகாரிகள் அந்த 2 ஓட்டல்களுக்கும் போலீசார் உதவியுடன் சீல் வைத்தனர்.