செய்திகள்
நாகை மாவட்டத்தில் 1 வயது குழந்தை உள்பட 3 பேருக்கு கொரோனா
நாகை மாவட்டத்தில் 1 வயது குழந்தை உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் 433 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் வெளி மாவட்டத்தில் இருந்து 8 பேர் நாகை மாவட்ட கணக்கில் இருந்து நீக்கப்பட்டதால் தொற்று எண்ணிக்கை 425 ஆக மாறியது.
இந்தநிலையில் நேற்று கீழ்வேளூர் அருகே வடுகச்சேரியை சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தை, கும்பகோணம் தாராசுரம் மார்க்கெட்டில் இருந்து நாகைக்கு காய்கறி ஏற்றிவரும் சிக்கலை சேர்ந்த 54 வயதுடைய வேன் டிரைவர் உள்பட 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 428 ஆக உயர்ந்தது. கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியான நிலையில் 280 பேர் குணமடைந்துள்ளனர். 147 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகை மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் 433 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் வெளி மாவட்டத்தில் இருந்து 8 பேர் நாகை மாவட்ட கணக்கில் இருந்து நீக்கப்பட்டதால் தொற்று எண்ணிக்கை 425 ஆக மாறியது.
இந்தநிலையில் நேற்று கீழ்வேளூர் அருகே வடுகச்சேரியை சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தை, கும்பகோணம் தாராசுரம் மார்க்கெட்டில் இருந்து நாகைக்கு காய்கறி ஏற்றிவரும் சிக்கலை சேர்ந்த 54 வயதுடைய வேன் டிரைவர் உள்பட 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 428 ஆக உயர்ந்தது. கொரோனா தொற்றுக்கு ஒருவர் பலியான நிலையில் 280 பேர் குணமடைந்துள்ளனர். 147 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.