செய்திகள்
செல்போன் கடை கொள்ளை

செல்போன் கடை பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் பொருட்கள் கொள்ளை

Published On 2020-07-19 09:35 GMT   |   Update On 2020-07-19 09:35 GMT
வேதாரண்யம் அருகே செல்போன் கடை பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் பொருட்கள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் அருகே உள்ள செட்டிப்புலத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன் (வயது30). இவர் கரியாப்பட்டினம் கடைவீதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கடைக்குள் சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.16 ஆயிரம் மற்றும் செல்போன், மடிக்கணினி, சார்ஜர் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புடைய பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து முத்துக்குமரன் கரியாப்பட்டினம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராசேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News