செய்திகள்
டிரைவர் தற்கொலை

காரைக்கால் அருகே தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை

Published On 2020-07-18 15:37 IST   |   Update On 2020-07-18 15:37:00 IST
காரைக்கால் அருகே தூக்குப்போட்டு டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்கால்:

காரைக்கால் அருகே உள்ள வரிச்சிக்குடி சோனியா காந்திநகரை சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் மணிகண்டன்(வயது21). டிரைவர். இவருக்கு மது பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதை பெற்றோர் கண்டித்ததால் மனவேதனை அடைந்த மணிகண்டன் சம்பவத்தன்று வீட்டு தோட்டத்தில் யாரும் இல்லாத நேரத்தில் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News