செய்திகள்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று

Published On 2020-07-15 14:46 GMT   |   Update On 2020-07-15 14:46 GMT
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணிக்கு தொற்று உறுதியான நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 
Tags:    

Similar News