செய்திகள்
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்
குடியாத்தம் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், தட்டப்பாறை ஊராட்சி ஏரியின்கீழ்பட்டி பகுதியில் 150 பேர் வசிக்கின்றனர். கடந்த ஒருவார காலமாக இப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனவும், இதுகுறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலையில் காலிக்குடங்களுடன் தட்டப்பாறை கிராம நிர்வாக அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம், தட்டப்பாறை ஊராட்சி ஏரியின்கீழ்பட்டி பகுதியில் 150 பேர் வசிக்கின்றனர். கடந்த ஒருவார காலமாக இப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனவும், இதுகுறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலையில் காலிக்குடங்களுடன் தட்டப்பாறை கிராம நிர்வாக அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.