செய்திகள்
குழந்தை

108 ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிரசவம்- அழகான பெண் குழந்தை பிறந்தது

Published On 2020-06-15 07:20 GMT   |   Update On 2020-06-15 07:20 GMT
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கர்ப்பிணிக்கு 108 ஆம்புலன்சில் அழகான பெண் குழந்தை பிறந்தது.
காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சாக்கோட்டை அருகே உள்ள அம்மனாபட்டியை சேர்ந்த முருகன் மனைவி உமையாள் (வயது25). நிறைமாத கர்ப்பிணியான இவர் பிரசவ வலியால் பீர்க்கலைக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக காரைக்குடி மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

இதையடுத்து அவரை 108 ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். கோட்டையூர் அருகே வரும்போது ஆம்புலன்சில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு மருத்துவ உதவியாளர் பிரியா சிகிச்சை அளித்தார்.
Tags:    

Similar News