செய்திகள்
தற்கொலை

செம்பனார்கோவில் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

Published On 2020-06-09 14:05 IST   |   Update On 2020-06-09 14:05:00 IST
செம்பனார்கோவில் அருகே உடல் நலக்குறைவால் மன வேதனை அடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பொறையாறு:

செம்பனார்கோவில் அருகே உமையாள்புரம் கிராமத்தில் கருவேல மரக்காடு உள்ளது. இந்த காட்டில் உள்ள ஒரு மரத்தில் அழுகிய நிலையில் ஆண் பிணம் தொங்கியது. இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்தவர்கள் செம்பனார்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார், அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தூக்கில் பிணமாக தொங்கியவர், மயிலாடுதுறை தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பக்கிரிசாமி மகன் வேலு (வயது35) என்பதும், உடல் நலக்குறைவால் மன வேதனை அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுகுறித்து செம்பனார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Similar News