செய்திகள்
கொரோனா வைரஸ்

சீர்காழி அருகே சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-06-07 09:50 GMT   |   Update On 2020-06-07 09:50 GMT
நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சப்-இன்ஸ்பெக்டர் கடந்த 29ம் தேதி சென்னை சென்றார். அங்கு நடைபெற்ற காவலர் பயிற்சிக்கு சென்று 2ம் தேதி திருவண்காடு வந்துள்ளார். அவருக்கு லேசான காய்ச்சல் அறிகுறி இருந்ததால் 4ம்தேதி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொன்டார். இதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சனிக்கிழமை மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருடன் காரில் வந்த உறவினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் மயிலாடுதுறை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இதனால் திருவெண்காடு காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு அருகில் உள்ள மண்டபத்தில் செயல்படுகிறது. பணியில் உள்ள காவலர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனை செய்துள்ளனர்.

மேலும் காவல் நிலையம், குடியிருப்புகள் முழுவதும் திருவெண்காடு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி நடராஜன் மேற்பார்வையில் கிருமி நாசினி தெளித்து தூய்மை பணியில் ஊராட்சி நிர்வாகம் ஈடுப்பட்டுள்ளது . வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்மோகன் தலைமையில் அப்பகுதியில் நோய் தொற்று பரவாமல் மருத்துவ பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் சீர்காழி பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. இதே போல் சென்னடிலிருந்து வந்த பூம்புகார் வெள்ளையனிருப்பு பகுதியிலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

Tags:    

Similar News