செய்திகள்
நாகை அருகே வேனில் 40 கிலோ கஞ்சா கடத்தல் - 5 பேர் கைது
நாகையில் வேனில் 40 கிலோ கஞ்சா மூட்டைகளை கடத்தியது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பப்ளிக்ஆபீஸ் சாலையில் இன்று காலை டி.எஸ்.பி. முருகவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் விவேக்ரவிராஜ், போலீசார் சதீஷ்குமார், கோகுல்ராஜ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நாகூரில் இருந்து நாகப்பட்டினம் நோக்கிவந்த வேனை சோதனை செய்தனர். அதில் 40 கிலோ கஞ்சா மூட்டைகள் இருந்தது கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து வேனிலி வந்த 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவை எங்கிருந்து எங்கு கொண்டு செல்வதற்காக கடத்தி வரப்பட்டிருக்கிறது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பப்ளிக்ஆபீஸ் சாலையில் இன்று காலை டி.எஸ்.பி. முருகவேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் விவேக்ரவிராஜ், போலீசார் சதீஷ்குமார், கோகுல்ராஜ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நாகூரில் இருந்து நாகப்பட்டினம் நோக்கிவந்த வேனை சோதனை செய்தனர். அதில் 40 கிலோ கஞ்சா மூட்டைகள் இருந்தது கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து வேனிலி வந்த 5 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவை எங்கிருந்து எங்கு கொண்டு செல்வதற்காக கடத்தி வரப்பட்டிருக்கிறது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.