செய்திகள்
கொரோனா வைரஸ்

சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று

Published On 2020-06-03 11:36 GMT   |   Update On 2020-06-03 11:36 GMT
சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

மயிலாடுதுறை:

சென்னையில் இருந்து மயிலாடுதுறைக்கு 3 பெண்கள் கார் மூலம் மயிலாடுதுறைக்கு வந்தனர். இதில் மயிலாடுதுறையை அடுத்த மாப்படுகை கிராமத்தைச் சேர்ந்த பெண் திருவல்லிக்கேணியில் தனியார் நிறுவனம் ஒன்றில் சமையலராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருடன் சேர்ந்து பயணம் செய்த மகாராஜபுரத்தை சேர்ந்த 2 பெண்கள், கார் ஓட்டுநர் மற்றும் தொற்று உறுதியான பெண்ணுடன் தொடர்பிலிருந்த அவரது குடும்பத்தினர் 5 பேர் என மொத்தம் 8 பேரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனை கொரேனா வார்டில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

இதையடுத்து, மாப்படுகை கிராமத்தில் அப்பெண் தங்கியிருந்த பகுதியில் தடுப்புகள் அமைத்து சுகாதாரத்துறையினர் சீல் வைத்தனர். அப்பகுதியில் சுகாதாரப் பணியாளர்கள் சுகாதார நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். 14 நாட்கள் தனிமைபடுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Tags:    

Similar News