செய்திகள்
சிறுவன் கொலையில் மேலும் 3 பேர் கைது
சிவகங்கையை அடுத்த கீழவாணியங்குடி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் கொலையில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:
சிவகங்கையை அடுத்த கீழவாணியங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்(வயது17) என்பவர் கடந்த 26-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே 6 பேரை சிவகங்கை நகர் போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் விசாரணை நடத்தி இந்த வழக்கில் தொடர்புடைய கீழவாணியங்குடியைச் சேர்ந்த சேகர்(54) மற்றும் மானாமதுரையை சேர்ந்த தமிழரசன்(19), தினேஷ்குமார் என்ற அசோக்குமார்(19) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவகங்கையை அடுத்த கீழவாணியங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ்(வயது17) என்பவர் கடந்த 26-ந்தேதி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே 6 பேரை சிவகங்கை நகர் போலீசார் கைது செய்தனர்.
இதுதொடர்பாக நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் ஆகியோர் விசாரணை நடத்தி இந்த வழக்கில் தொடர்புடைய கீழவாணியங்குடியைச் சேர்ந்த சேகர்(54) மற்றும் மானாமதுரையை சேர்ந்த தமிழரசன்(19), தினேஷ்குமார் என்ற அசோக்குமார்(19) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் இதுவரை 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.