செய்திகள்
கோப்பு படம்

வேலூரில் நிவாரண உதவி கேட்டு நாட்டுப்புற கலைஞர்கள் ஊர்வலம் - 94 பேர் கைது

Published On 2020-05-26 12:15 GMT   |   Update On 2020-05-26 12:15 GMT
வேலூரில் நிவாரணம் கேட்டு ஊர்வலமாக சென்ற நாட்டுப்புற கலைஞர்கள் 94 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேலூர்:

ஊரடங்கு காரணமாக கோவில் திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டுப்புறக் கலைஞர்கள் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கிரீன் சர்க்கிளில் திரண்டனர். அங்கிருந்து மேளதாளத்துடன் கலெக்டர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.

ஊரடங்கால் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வருமானம் இல்லாததால் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அரசு 4 மாதங்களுக்கு ஒவ்வொரு நாட்டுப்புறக் கலைஞருக்கு ரூ 4 ஆயிரம் வழங்க வேண்டும்.

அரசு நிகழ்ச்சிகளுக்கு நாட்டுப்புறக் கலைஞர்களை பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியபடி அவர்கள் சென்றனர்.

வேலூர் வடக்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி தடையை மீறி ஊர்வலம் சென்றதாக 94 பேரை கைது செய்தனர்.
Tags:    

Similar News