செய்திகள்
கைது

கடலூர் அருகே புதுப்பெண் கடத்தல் - ஊராட்சி செயலர் கைது

Published On 2020-05-26 09:38 GMT   |   Update On 2020-05-26 09:38 GMT
கடலூர் அருகே புதுப்பெண் கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் ஊராட்சி செயலாளரை கைது செய்தனர்.
புவனகிரி:

கடலூர் மாவட்டம் புவனகிரி சித்தேரிரோட்டு தெருவை சேர்ந்தவர் ரவி. விவசாயி. இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 27). இவருக்கும், கிள்ளை அருகே உள்ள நவாப்பேட் டையை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்த நிலையில் வீட்டில் இருந்த புதுப்பெண் ராஜேஸ்வரி தீடீரென மாயமானார். அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து புவனகிரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ராஜேஸ்வரியை தேடிவந்தனர். இந்த நிலையில் ராஜேஸ்வரியை சித்தேரி தெற்கு தெருவை சேர்ந்த ஊராட்சி செயலர் ஜெயராஜ் (39) என்பவர் கடத்தி சென்றது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து ஜெயராஜ் மீது போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News