செய்திகள்
மரணம்

சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

Published On 2020-05-26 09:07 GMT   |   Update On 2020-05-26 09:07 GMT
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள காட்டுமன்னார் கோவில் பகுதியை சேர்ந்தவர் வீரமணி. இவரது மனைவி முத்துலட்சுமி. சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் காட்டுமன்னார்கோவிலில் உள்ள உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பினர். சிதம்பரம் குமராட்சியில் உள்ள புதுகுழாம்மேடு பஞ்சாயத்து அலுவலகம் அருகில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி வீரமணி, முத்து லட்சுமி இருவரும் கீழே விழுந்தனர். இதில் முத்துலட்சுமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மரில் சேர்க்கப்பட்டார். அங்கு முத்துலட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Tags:    

Similar News