செய்திகள்
திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் திடீர் மாயம்
புவனகிரி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட புதுப்பெண் திடீரென மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புவனகிரி:
கடலூர் மாவட்டம் புவனகிரி சித்தேரிரோட்டு தெருவை சேர்ந்தவர் ரவி. விவசாயி. இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 27).
இவருக்கும், கிள்ளை அருகே உள்ள நவாப்பேட் டையை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்களின் திருமணம் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் குடும்பத்தினர் திருமண தேதியை மாற்றி வைத்தனர்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த புதுப்பெண் ராஜேஸ்வரி திடீரென மாயமானார். அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து புவனகிரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ராஜேஸ்வரியை தேடிவருகின்றனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரி சித்தேரிரோட்டு தெருவை சேர்ந்தவர் ரவி. விவசாயி. இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 27).
இவருக்கும், கிள்ளை அருகே உள்ள நவாப்பேட் டையை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்களின் திருமணம் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் குடும்பத்தினர் திருமண தேதியை மாற்றி வைத்தனர்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த புதுப்பெண் ராஜேஸ்வரி திடீரென மாயமானார். அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்து புவனகிரி போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ராஜேஸ்வரியை தேடிவருகின்றனர்.