செய்திகள்
கைது

வேலூரில் செயின் பறிப்பு கொள்ளையர்கள் 2 பேர் கைது - 16 பவுன் நகை மீட்பு

Published On 2020-05-25 10:53 GMT   |   Update On 2020-05-25 10:53 GMT
செயின் பறிப்பு கொள்ளையர்கள் 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 16 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர்.
வேலூர்:

பள்ளிகொண்டா சாவடி தெருவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மாதம் 15-ந்தேதி தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பைக்கில் வந்த 2 வாலிபர்கள் அவர் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர்.

இதேபோல் கடந்த 19-ந்தேதி அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லூர் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் பைக்கில் வந்தவர்கள் செயினை பறித்து சென்றனர்.

இதுகுறித்து பெண்கள் 2 பேரும் பள்ளிகொண்டா போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் மனோன்மணி வழக்குப்பதிவு செய்து செயின் பறிப்பு கொள்ளையர்களை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமார், ரவி, ஜெயகாந்தன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.பழைய குற்றவாளிகளின் பட்டியலை வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது செயின் பறிப்பு வழக்கில் ஏற்கனவே கைதான வேலூர் முத்துமண்டபம் பகுதியை சேர்ந்த லோகேஷ் கடந்த மாதம் ஜெயிலில் இருந்து வெளியே வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் வேலூர் முத்து மண்டபத்தை சேர்ந்த லோகேஷ், சேண்பாக்கத்தை சேர்ந்த யாசிப், இருவரும் சேர்ந்து வேலூர், சத்துவாச்சாரி, பாகாயம், பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதியில் பெண்களிடம் செயின் பறித்தை ஒப்புக்கொண்டனர்.

போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 16 பவுன் நகைகளை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாசிப் சேண்பாக்கத்தில் உடற்பயிற்சி நிலையம் நடத்தி வருகிறார். உடற்பயிற்சி நிலையத்திற்கு லோகேஷ் சென்று வந்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பைக்கில் சென்று சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
Tags:    

Similar News