செய்திகள்
தொழிலாளி தற்கொலை

தேவகோட்டை அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2020-05-24 13:24 GMT   |   Update On 2020-05-24 13:24 GMT
தேவகோட்டை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேவகோட்டை:

தேவகோட்டை பழைய சருகணி சாலை பகுதியில் வசித்து வந்தவர் தச்சுத் தொழிலாளி கணேசன்(வயது28). தற்போது ஊரடங்கு காரணமாக எவ்வித வேலையும் இல்லாத நிலையில் வறுமையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தேவகோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News