செய்திகள்
ஜோலார்பேட்டை அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
ஜோலார்பேட்டை அருகே கணவன் மனைவி இடையே தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஜோலார்பேட்டை:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் செல்வம். ஜோலார்பேட்டையில் கார் வாட்டர் சர்வீஸ் கடையில் வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ஜோலார்பேட்டையை அடுத்த இடையன் பட்டியை சேர்ந்த லாவண்யாவை (வயது 27) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை வாட்டர் சர்வீஸ் கடையில் இருந்து வீட்டிற்கு வந்த செல்வம், மனைவியிடம் உணவுகேட்டுள்ளார். அதற்கு லாவண்யா சமையல் செய்யவில்லை என கூறியுள்ளார்.
இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செல்வம் ஹோட்டலில் சாப்பிடுவதற்காக வீட்டிலிருந்து வந்துள்ளார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் உள்ள மின்விசிறியில் லாவண்யா தூக்கில் தொங்கினார்.
இதனைக்கண்ட செல்வம் அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி லாவண்யா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யா தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் செல்வம். ஜோலார்பேட்டையில் கார் வாட்டர் சர்வீஸ் கடையில் வேலை செய்து வருகிறார்.
இவர் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு ஜோலார்பேட்டையை அடுத்த இடையன் பட்டியை சேர்ந்த லாவண்யாவை (வயது 27) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை வாட்டர் சர்வீஸ் கடையில் இருந்து வீட்டிற்கு வந்த செல்வம், மனைவியிடம் உணவுகேட்டுள்ளார். அதற்கு லாவண்யா சமையல் செய்யவில்லை என கூறியுள்ளார்.
இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செல்வம் ஹோட்டலில் சாப்பிடுவதற்காக வீட்டிலிருந்து வந்துள்ளார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு சென்றார். அப்போது வீட்டில் உள்ள மின்விசிறியில் லாவண்யா தூக்கில் தொங்கினார்.
இதனைக்கண்ட செல்வம் அதிர்ச்சியடைந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி லாவண்யா பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யா தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.