செய்திகள்
கைது

விருதம்பட்டு அருகே மோட்டார் சைக்கிள்களில் மணல் கடத்திய 3 பேர் கைது

Published On 2020-05-23 12:24 IST   |   Update On 2020-05-23 12:24:00 IST
விருதம்பட்டு அருகே மோட்டார் சைக்கிள்களில் மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காட்பாடி:

விருதம்பட்டு அடுத்த தண்டலம்கிருஷ்ணாபுரம் பகுதியில் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிள்களில் மணல் கடத்தப்படுவதாக விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்தப் பகுதியில் தீவிர ரோந்துச் சென்றனர்.

அப்போது 3 பேர் மூட்டைகளில் மணலை அள்ளி மோட்டார் சைக்கிள்களில் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அவர்கள் கழிஞ்சூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 22), விருதம்பட்டு முல்லை நகரைச் சேர்ந்த மகேஷ் (21), அஜய் அரவிந்த (20) எனத் தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்கள், மணல் மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News